Pages

Wednesday, April 22, 2009

ஓவியம் Vs ஓவியன்

நீ வரும் தெருவில்
மேகம் மழையாய் பொழியும்
உன் விரல் மோதி
மழை துளி தேனாகும்

உனக்காக காத்திருந்து
பூக்கள் உதிரும்
உன் பாதம் படவே
அவை விரதம் இருக்கும்

உன் முகம் காண
சூரியன் உதிக்கும்
உன் அழகு கண்டு
வெண்ணிலவும் தேயும்

உன் பெயர் சொல்லி
நதிகள் ஓடும்
உன் தாய்மொழி கேட்க
பறவைகள் கூடும்

இயற்கையே காதலிக்கும்
ஓவியம் நீ!!
நீ கற்பனை என்றாலும்…
உன்னை வரைந்த ஓவியன் நான்

The masterpiece comes only from the master ;)

No comments:

Post a Comment