Pages

Friday, April 10, 2009

+ காதல் சிலுவையில் +

காதலை சொன்னதற்கா
என்னை காட்டிக்கொடுத்தாய்?
கண்ணாடி துண்டுகளாய்
நொறுங்கினேன்...
மூன்று மூச்சு விடுவதற்குள்!!

அடித்தது உன் அண்ணன்
என்பதால் விடவில்லை
உனக்கான நம் சொந்தம்
என்பதால் விட்டுவிட்டேன் .

கல் நெஞ்சம் உனக்கு
கல்லடிகள் எனக்கு :(
உனக்காக உயிர் பிரிந்தாலும்
உள்ளம் கலங்கேன் ..
உடல் சிதைவதற்க்கா
சிந்தை கலங்குவேன்?

நீ கண் சிமிட்டி
காட்டி கொடுத்தால்
தர்ம அடிகள் தூரமில்லை :)
நீ முத்தம் செய்து
காட்டி கொடுத்தால்
சிலுவையும் எனக்கு பாரமில்லை. !!

"I am what you scattered and the pieces you never gather up"

No comments:

Post a Comment